69
நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்தபொன்
"
(அகம்.258)
என்பதனாலும் அறியப்படும். பாழிப் பொன் கவர அடிக்கடி போர் நிகழ்ந்ததனால் அந் நகர் செருப்பாழி எனப் பெயர் பெற்றது போலும்!
ஏழில்மலை என்பதைப் பிராமணர் சத்த சைலம் (ஸப்த சைல) என மொழிபெயர்த்தனர். பின்னர் ஏழில்மலை என்பது எலிமலை எனத்திரிந்தபோது, ஏழில்மலை நாட்டை அவர் மூசிகநாடு என்றனர். மூசிகம் (மூஷிக) என்பது எலியைக் குறிக்கும் வடசொல். பாழிச் சிலம்பு என்பது பாழிக்கல் என்றும் வழங்கும். அது இன்று பாட்கல் எனத் திரிந்துள்ளது. வியலூர் என்பது, இன்று கன்னடமொழி யியல்பிற்கேற்பப் பெயிலூர் (Bailur) என்று வழங்குகின்றது.
6
கொண்கானத்தின் கடலோர வடபகுதி துளுநாடு எனப்படும். அங்குத் தோகைக்கா என்ற ஊருள்ளது. மயில்கள் நிறைந்த சோலையினால் அவ் வூர் அப் பெயர் பெற்றது.
66
.....பறைக்கண் பீலித்
தோகைக் காவின் துளுநாட் டன்ன’
99
பாழிச் சிலம்பும் மயிலுக்குப் பெயர் பெற்ற தென்பது,
CC
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயிற் கலாவத் தன்ன
99
(அகம். 15)
(அகம்.152)
என்பதனால்அறியப்படும். தோகைக்கா என்பது தோக்கா என மருவி, இன்று சோக்கு (ஜோக்) எனத் திரிந்துள்ளதாகப் பேரா. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையார் கூறுவார்.
கொண்கானம் என்பது கடைக்கழகக் காலத்திலேயே கொங் கணம் எனத் திரிந்துவிட்டது. "கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா?" என்று திருவள்ளுவர் மனைவியார் கூறியதாகக் கதையுண்மையும், “கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்” என்று சிலப்பதிகாரம்(25:156) கூறுவதையும் காண்க.
வெளியன் வேண்மான் ஆய் எயினன்
கொண்கானத்தின் தென்கீழ்ப் பகுதி புன்னாடு எனப்பட்டது.. அதை ஆண்ட வெளியன் வேண்மானார் மரபில் வந்தவன் வெளியன் வேண்மான் ஆய் எயினன். அவன் தலைநகர் வாகை.
66
வண்கை எயினன் வாகை யன்ன
99
(புறம்.351)