இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதுரைக் கோயில் வரலாறு
21
வழிகண்ட பெருமையை நினைத்தேன்! என்னை மறந்து 'சோதியே சுடரே' என வாழ்த்தினேன். உனக்கு நினைவுக்கு வருகிறதா? நீ சொல்லும் திருப்பணிகளை நினைக்கும்போது அந்த நாவுக்கரசர் திருவாக்கே முந்தி நிற்கிறது:
“விளக்கினார் பெற்ற இன்பம்
மெழுக்கினால் பதிற்றி யாகும்;
துளக்கில்நன் மலர்தொடுத்தால்
தூயவிண் ஏற லாகும்;
விளக்கிட்டார் பேறு சொல்லின்
மெய்ந்நெறி ஞான மாகும்;
அளப்பில கீதம் சொன்னார்க்(கு)
அடிகள்தாம் அருளுமாறே”
பொன் : நன்றாக இருக்கிறது. அடுத்துள்ள மண்டபத்திற்குச்
செல்வோம்.