உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

75

அகோர வீரபத்திரர்

பொன் : : இவர்க்குக் கிழக்கே வடக்குப் பார்த்து உருத்திரர் உள்ளார். இவர் கையில் உள்ள நெடுஞ் சூலமே இவ் உருத்திரர் உக்கிரத்தைக் காட்டப் போதும்.

கண்

பிச்சைப் பெருமான் கையிலுள்ள சூலம் அழகுப் பொருளாக விளங்குகிறது. உருத்திரர் கையில் உள்ள சூலம் உக்கிரப் பொருளாகவே விளங்குகிறது. அவர்க்கில்லாத மீசை, எண்கை, உயரம் இவை யெல்லாம் வெகுளியை வெளிப்படுத்தும்.

பொன் : இத்தூணின் கிழக்குப் பக்கம் இருப்பவர் வேடர் பெருமானும் அருச்சுனனும் ஆவர் (கிராத

அருச்சுனர்); இருவரும் வில்லாளிகள். அருச்சுனன் மீசையோடு இருக்கிறான். அப் பக்கத்து உருத்திரரும். இப் பக்கத்து வேடரும் வெகுளியில் ஒப்பானவர் என்பதைக் கலைவல்லான் குறிப்பாக உணர்த்தி யுள்ளான். ஒரே தூணின் இப்பாலும் அப்பாலும்