உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

திருஞானசம்பந்தர் தேவாரம்

நீல மாமிடற் றால வாயினான்

145

பால தாயினார் ஞால மாள்வரே.

ஞால மேழுமாம் ஆல வாயிலார்

சீல மேசொலீர் காலன் வீடவே.

ஆல நீழலார் ஆல வாயிலார்

கால காலனார் பால தாமினே. அந்த மில்புகழ் எந்தை யாலவாய் பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே.

ஆட லேற்றினான் கூட லாலவாய் பாடி யேமனம் நாடி வாழ்மினே.

அண்ண லாலவாய் நண்ணி னான்றனை

எண்ணி யேதொழத் திண்ண மின்பமே. அம்பொ னாலவாய் நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

அரக்க னார்வலி நெருக்க னாலவாய்

உரைக்கு முள்ளத்தார்க் கிரக்க முண்மையே.

(8)

அருவ னாலவாய் மருவி னான்றனை

இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே.

(9)

ஆர நாகமாம் சீர னாலவாய்த்

தேர மண்செற்ற வீர னென்பரே.

(10)

அடிகள் ஆலவாய்ப் படிகொள் சம்பந்தன்

முடிவி லின்றமிழ் செடிகள் நீக்குமே.

(11)