உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

235

இந்த ஐயம் அவருக்கும் ஏற்பட்டுப் பிறகு மாமல்லை என்பது மாமல்லபுரமாகத்தான் இருக்கவேண்டும் என்னும் முடிபுக்கு வருகிறார். அவர், அதே ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் 32-ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்:

"இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப் பட்டினம், முதல் நரசிம்மவர்மனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப்பெயரைப் பெற்றிருத்தலும், அதனால், கடன் மல்லை என்ற தன் பழம் பெயரேயன்றி, மாமல்லபுரம் என்ற புதுப் பெயரும் அதற்குப் பெரு வழக்காயமைந்திருத்தலும் கூடியனவே.

இவ்வாறு மாமல்லை என்பதற்கு மாமல்லபுரம் என்னும் பொருளை இவர் ஒப்புக்கொள்கிறார். இதனோடு நிற்கவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய முதலாம் மகேந்திர வர்மனுக்குச் சத்துருமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண் டென்பதைக் கூறி, சத்துருமல்லன் என்னும் பெயரால் மல்லை என்னும் பெயர் வந்திருக்கக்கூடும் என்று குறிப்பாகக் கூறுகிறார். இவர் குறிப்பாகக் கூறுவது போல இவ்வூருக்குச் சத்துருமல்லபுரம் என்ற பெயர் வழங்கியதாக இதுவரையில் சாசனங்களிலும் இலக்கியங் களிலும் சான்று கிடையாது. ஆகவே, மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பது உறுதியாகிறது.

மேலும், அய்யங்கார் அவர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியுள் மகேந்திவர்மனுக்கும் அவன் தந்தை சிம்மவிஷ்ணுவுக்கும் சிலையுருவங்கள் உள்ளன என்று கூறி அதனால் அக்கோயில் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தென்று கூறுகிறார். இதுவும் தவறு. ஷ ஆதிவராகர் சந்நிதியுள், நரசிம்மவர்மன் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட சிங்கத்தூண்கள் இருப்பதனால், அக்கோயில் நரசிம்மன் காலத்துக்கு முற்பட்டதல்ல.

எனவே, பூதத்தாழ்வார் மாமல்லை யாகிய மாமல்ல புரத்தைக் கூறுகிற படியினாலே, அப்பெயர் ஏற்பட்ட மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவராதல் வேண்டும். மற்ற ஆதாரங்களைக் கொண்டு பார்க்கிறபோது, நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே அவர் காலத்தில் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற மூன்று