பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி
புல்லும் பெறுமேவிடை புணரச்
சடைமே லொருபெண் புகவைத்தீ
ரில்லந்தோறும் பலியென்றா
லிரக்க விடுவா ரிடுவாரே முல்லைமுறுவல் கொடி யெடுப்பக் கொன்றை முகமோதிரங் காட்டச் செல்லும் புறவிற் றென்னாகைத் திருக்காரோணத் திருப்பீரே.
மாண்டா ரெலும்புங் கிலும்பு மெல்லா மாலையாக மகிழ்ந்தருளிப்
பூண்டார் பொறியாடர வாமை புரமூன் றெரித்தீர் பொருளாகத் தூண்டா விளக்கு மணிமாட வீதிதோறுஞ் சுடருய்க்கச்
சேண்டார் புரிசைத் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே.
ஒருவர்க் கொருவ ரரிதாகி லுடை வெண்டலை கொண்டூரூரி னிருவர்க் கொருவரிரந் துண்டா லெளிதே சொல்லீ ரெத்தனையும் பருவற்கனகங் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவாத் தெருவிற் சிந்துந் தென்னாகைத்
திருக்கா ரோணத் திருப்பீரே.
தோடையுடுத்த காதுடையீர்
தோலையுடுத்துச் சோம்பாதே
யாடையுடுத்துக் கண்டக்கா
லழகிதன்றே யரிதென்று
ஓடையுடுத்த குமுதமுளங்
கைமறிப்பப் பறுங்கை யனஞ்
சேடை யுடுத்துந் தென்னாகைத்
திருக்கா ரோணத்திருப்பீரே.
357
3
4
5
6