பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி
பூவலயந் தனிற்கரியாய் நின்ற மன்னா!
387
புலவரசை புறங்கண்ட புகழ்சேர் கோவே!
சொலவரிய திருநாம முனக்கே யல்லாற்
சொல்லொருவர்க் கிசையுமோ தொண்டைக்கோவே.
49
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கோவே மாலை மாலையர்க்கோ கோவே வேண்டு நிலவோகண் கோவே மாலை மாலையது கொண்டார் குறுகு மாறறியேன் கோவே மாலை நீண்டுமுடியார் கொற்ற நந்தி கச்சியுளார் கோவே மாலை யுள்ளுமெங்கள் கோவே கம்ப ரானாரே.
50
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆகிடுக மாமை யணிகெடுக மேனி
யலரிடுக வாரு மயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி
பொருபுணரி சங்கு வளைமென்
னாகிடறு கானல் வளமயிலை யாளி
நயபானும் எங்க ளளவே
யேகொடி யனாக விவையியையும் வஞ்சி
யினியுலகில் வாழ்வ துளதோ.
நேரிசை வெண்பா
உளமே கொடிமருங் குண்டில்லை யென்னி
லிளமுலைக ளெவ்வா றிருக்கும் - கிளரொளிய
தெள்ளிலைவேற் கண்ணினா டெள்ளாற்றிவ் வென்றகோன்
றன்மயிலை யன்னா டனக்கு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தனக்குரிய வென்கொங்கை தான் பயந்த
மழகளிற்றுக் காக்கித் தன்பால்
எனக்குரிய வரைமார்பம் எங்கையர்க்கே
யாக்கினான் இகல்வேல் மன்னர்
சினக்கரியும் பாய்மாவுந் தெள்ளாற்றில்
51
52