உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

சென்று, தங்கள்மீது மக்கள் சுமத்தும் பழியையும் நிந்தனை களையும் கூறினார்கள். தங்கள்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை நீக்கா விட்டால், தங்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் வீண் பழியைப் போக்கா விட்டால், பெளத்த மதமே அழிந்து விடும் என்று முறையிட்டார்கள்.

66

நரகம்

பகவன் புத்தர் அமைதியோடு இவர்கள் கூறியதைக் கேட்டார். கடைசியில், ‘பிக்ஷுக்களே! பொய் கூறுகிறவர்கள் அடைவார்கள். வீண் பழி சுமத்துகிறவர்களும் நரகம் அடைவார்கள். உண்மை வெளிப்படும். நீங்கள் அஞ்சவேண்டா” என்று அருளினார். நகரத்துக்கு வெளியேயிருக்கும் மதுபானக் கடையிலே வழக்கம்போலக் குடிகாரர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமா யிருந்தது. வெறியாட்டமும் கூச்சலும் ஏசலும் பிதற்றலும் பேச்சும் உச்சநிலையில் இருந்தன. சுந்தரியின் கொலையைப் பற்றிய பேச்சும் அங்குப் பேசப்பட்டது.

66

'சுந்தரியைக் கொன்னுபூட்டாங்கடா. அவன்களை சும்மா விடரனா பார்" என்று ஒரு வெறியன் மார்தட்டி மீசையை முறுக்கிக் கொண்டு, குடிமயக்கத்தில் நிற்கமுடியாமல் தள்ளாடினான். அப்பொழுது இன்னொரு குடியன். “அடே, என்னடா சொன்னே! என்ன செய்வே நீ? கிட்ட வாடா. அவளே குத்தின மாதிரி ஒரே குத்துலே யமலோகம் அனுப்பிடுறேன்” என்று சொல்லி, கத்தியால் குத்துவது போலக் கையை ஓங்கி அவனைக் குத்தவந்தான். ஆனால், குடி மயக்கத்தினால் கீழே விழுந்தான். எழுந்திருக்க முடியாமல் உடகார்ந்தபடியே மேலும் உளறினான். “டேய்! நான் யார் தெரியுமா? ஆம்பளேடா; சிங்கக் குட்டி!” என்று வீரம் பேசி மீசையை முறுக்கினான்.

66

ஆமாண்டா பொம்பளெயே கொன்னுபூட்ட ஆம்பளேடா இவன்! ஆம்பளேயாம். ஆம்பளே மீசையெ பாரு" என்று பேசினான் மற்றவன்.

“என்னடா சொன்னே? இதோ பார் உன்னை கொன்னுடறேன்” என்று கோபத்தோடு எழுந்து பாய்ந்தான்; வெறி மயக்கத்தில் விழுந்தான்.

இந்தச் சமயத்திலே நாலைந்து ஆட்கள் அவர்களை அணுகி அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் சாதாரண ஆட்களைப்போலக் காணப்பட்ட போதிலும், உண்மையில் அரசாங்கச் சேவகர்கள்; சுந்தரியின் கொலையைப் பற்றிப் புலன் விசாரித்து