52
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
அம்பல் பெருகி யலரான தல்லிதொறுந்
தும்பி முரலுஞ் சுரிகூந்தற்
கொம்பனைய
பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும்
அண்ணறான் செய்யு மருள்.
32
கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம் - மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம்.
33
தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தரையுந் தூய பெருவனமுஞ் சோலையுமா - மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின்.
34
கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெளியாட்டுச் - சால
மடவார் மயின்முருக னன்றியே யண்ணல் தடமார்பு முண்ணுமோ தான்.
35
தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ
ராய வவர்வரவு மன்றாயின் - மேயசீ
ரேலார்பூ வட்ட முறையிடவும் போதாது
வேலா முலைக்கு விலை.
36
வஞ்சி யிடைமடவாய் வல்வினையே னுண்கண்ணு நெஞ்சு மகலாது நிற்றலாற் செஞ்சுரும்பு
—
பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன்
றண்ணளிக்கு முண்டோ தவறு.
37
அன்ன நடைமடவா யாற்றி யமைவார்
சொன்ன வரிய சுரங்கடந்தோ - முன்னமரர்
தங்களூர் போலத் தனியே வடகொங்கிற் றிங்களூர் தோன்றுஞ் சிறந்து.
38
எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர் வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானு மொருதுணையா நாளைப்போ கும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து.
39