உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல்

துறத்த தொடர்பொடு துன்னிய கேண்மை

சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம்

பிறந்தவேல் வென்றிப் பொருட்டு.

5

சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் – பல்லார் பழித்தசொற் றீண்டாமற் சொல்லும் விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்லானேற் - பூக்குழலாய் நவ்வய லூரன் நறுஞ்சாந் தணியகலம்

புல்லலின் ஊடல் இனிது.

கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்

கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி.

ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய

வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே

வினவுதி யாயிற் கேண்மதி சினவா

தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றம்

இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோலெய்தி நும்மூர்க்கு,

நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா றெதிர்நீந்து மொருவ னதனைத்

தாழ்த லன்றோ வரிது தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய

வினையி னடங்கல் வேண்டும்

அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே.

(0

6

7

00