258
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
‘தண்டைந்த திண்டோளாய் தாங்கலாந் தன்மைத்தோ கண்டடையார் தம்மைக் கனற்றுமா-வண்டடைந்த
நாணீல நாறுந்தார் நன்னன் கலைவாய வாணீலக் கண்ணார் வடிவு.'
எனவும்
‘அறந்தருதண் செங்கோலை யன்ன மடந்தை
சிறந்தன சேவலோ டூடி - மறந்தொருகா
றன்ன மகன்றாலுந் தன்னுயிர் வாழாவா
லன்ன மகன்றி லிவை’
எனவும் இவை வெண்கூ வெண்பாவென்று செய்யுளிய லுடையார் காட்டிய பாட்டு.
(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரை மேற்கோள்.)
““மனைக்குப்பாழ் வாணுத லின்மை தான்சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ்
கற்றறி வில்லா வுடம்பு.'
ஃது அகவல் வெண்பாவென்று செய்யுளியலுடையார் காட்டிய பாட்டு.
(யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 4 உரைமேற்கோள்.)
“மஞ்சு சூழ் சோலை மலைநாட மூத்தாலும்
அஞ்சொன் மடவார்க் கருளு.'
இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.
‘இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரலகம் புல்லு.'
இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.
க
இவை செய்யுளியலுடையார் காட்டிய வெண்பா வெனக்
கொள்க.
வ
(யாப்பருங்கலக்காரிகை, 25, குணசாகரர் உரை)
“செய்யுளியலுடையார் நாற்சீரடி, தன்னையே நாலெழுத்து முதலா ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி என்றும்,