80
தென்சொற் கட்டுரைகள்
1. கிறித்துவுக்கு முற்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்நூல்களுள், தொல்காப்பியம் தவிர மற்றவையெல்லாம் அழிந்து போயினமையின், அவற்றிலுள்ள அருஞ்சொற்களும் மறைந்துபோயின.
2. பண்டைத் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டமை யின், அப் பகுதியில் வழங்கின எண்ணிறந்த திசைச்சொற்கள் அறவே மறைந்தன.
3. தமிழர் தம் அறியாமைபற்றி அருமையான தென்சொற்கட்குப் பதிலாக, வடசொற்களை வழங்கினதினாலும்,பண்டைக் காலத்தில் விரிவான தமிழகராதிகள் எழுதப்படாமையாலும், வழக்கற்ற தமிழ்ச்சொற்களெல்லாம் மறைந்தொழிந்தன.
4. தமிழ், மனித சமூகத்தின் இளமையில் தோன்றிய மிகப் பழைமை யான மொழியாதலின், இக்காலத்திற்குரிய சில கருத்துகள் அக்காலத் தமிழர்க்குத் தோன்றவில்லை. அதனால் அவற்றுக்குச் சொல்லுந் தோன்றவில்லை.
5. சென்ற 2000 ஆண்டுகளாகத் தமிழ் ஆரியவயப்பட்டுள்ளமை யின், புதுச்சொற்கள் புனைந்து தனித்தமிழ் வளர்க்கப்படவில்லை.
ஆகையால், தமிழைப் பிற புன்மொழிகள்போற் கருதி இழித்துக் கூறுவது தகாது.
ஒரு பொருளை ஆராயும்போது, விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் ஆராய்தல் வேண்டும்.
"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்.”
""
(அறநெறி: 42)
மேலும், வடசொல் தென்சொற்களைப் பிரித்துணர்தற்கு மொழிநூல், குலநூல்(Ethnology), சரித்திர நூல் முதலிய நூல்களின் துணை இன்றியமை யாது வேண்டப்படும். ஆகையால், அவற்றின் துணைகொண்டு உண்மை யறிந்து கடைப்பிடிக்க. இன்றேற் குஞ்சரந் தடவிய குருடர் கூற்றாய் முடியும் என்க.
"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.'
""
(குறள். 186)
- "செந்தமிழ்ச் செல்வி" நளி 1939