இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132
இளங்குமரனார் தமிழ்வளம் - 24
இலக்கண நிறைகடலாகவும் பேராசிரியராகவும் பெரும் புலவராகவும் விளங்கிய கந்தசாமியார் 15-11-1969இல் இறைவனடி சேர்ந்தார்.கூட்டிலிருந்து பறவை வேறோர் இடத்திற்குக் குடிபோவது போன்றதுதானே வாழ்வு! ஆனால், புகழ் நிலைப்பது ஆயிற்றே! கந்தசாமியார் புகழ் வாழ்வதாக!