உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலாப்பூர் ஸ்ரீநேமிநாதஸ்வாமி பதிகம்-3

தருமனீ தயவடிவுநீ சகலாகமஞ்சொலுஞ் சதுரனீ யொருவனீ பலவறிவுநீ யுலகங்கள் மூன்றையுமுடையனீ திருவுநீ ஜினநாதனீ திசையாடை மேவியச்செல்வனீ நிருபனீ திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. காலன்வந்துடல் மங்கும்போது கலக்கம் வந்தணுகாமலுன் சீலமந்திரமைந்து மென்னிடச்சிந்தை தன்னிலிருத்துவாய் மேலவானவர் போற்றிடும்பத்துவிற்பிரமாண சரீரனே நீலனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. பாசதொந்தமழுந்தியே வலைபட்டமானதுபோலவே பேசொணாதவிடும்பைகொண்டு பிறந்தநானுடல்வாடவோ வாசமேவு மசோகநீழலின்வர தனே யடியார்கள்மேல் நேசனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.

1

2

3

அலையும்வாரிதிபோல நெஞ்சனுதினமு மாசையழுந்தியே யுலையின்மேன் மெழுகாகுமெந்தனை யுறுதி முத்தியில்வைப்பையே சொலையிலாநெறி வேந்தனே யொளிகுலவு முக்குடையாளனே நிலையனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.

4

பொறியினால் வருபாவம்வந்து புகாமலானது புக்கினுஞ்

செறியும் வேதனைநரகில்வீழ்ந்து திகைத்திடாமல் விலக்குவாய் வெறியுலாவிய வனசமாமலர்மேல் நடந்தருள்வீரனே நெறியனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.

5

உனைவணங்கினர்பிறவி யொன்றிலுயரு முத்தியிலேறுவ ரௌவறிந்து முனிருபதங்களை யேற்றிலேன் மலர்சாற்றிலேன் வினைகடிந்தருடீரனே முழு மெய்யனே நெறியையனே நினைவனே திருமயிலைமேவிய நேமிநாத ஸ்வாமியே. மதியிலா முழுமூடர் தம்முடன் மருவியுன்னை மறந்துயான் புதிய தாமரரையிலையி னீரதுபோலுழன்றிடவோ சொலாய்

6