உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

யாவரும் தலைக்கொள்ள வேண்டிய தவறாக் கடன் பாடன்றோ!

மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும் அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது முன்னோராற் பொருட் சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவையொழிய இனியும் இறவாது மறைந்து கிடப்பன வற்றை வெளிக்கொணர்ந்து நிலை பெறச் செய்தலேயாம். இவ் வழியில் பெரிதும் உழைத்தும் பெரும்புகழ் படைத்த ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரமஸ்ரீ சாமிநாதய்யர் அவர்கள் முதலிய வித்துவ சிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடு கூறத்தக்கது யாது? தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க அம் மக்கள், அவை இருக்கு அ மிடந்தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமைபோலன்றோ ஆகும், ஈடு மெடுப்பு மற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமு முடைய நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல் ! ஆதலால் முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனைசெய்து தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப் பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற் கடமையாம்.

பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனைப் பாதுகாப்பதோடு ஒவ்வொருவரும் தத்தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும் புதுவரும்படியைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டு மென்பது பொதுவான உலக நோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டு விலகத்தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு; அந்த அந்தத் தலைமுறையார்களுக்கு அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பேயொழிய வேறில்லை. அத் தலைமுறையாரைப் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய வேறு குறியுமில்லை. ஆனதினால் எக்காலத்திலும் எவ் விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமன்றித் தங்களாற் கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர்களாகின்றார்கள். ‘பூர்வார் ஜிதம் மிகவும் பெரிதாயிருக்கின்றதே! நம் முயற்சியால் எத்தனைதான்

ரு