276
முரு:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
அமைதி! கேண்மின்!
முதற் சேவகன்: அமைதி! அமைதி!
நாரா:
நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ?
சேவகரிற் சிலர்:
சேவகர் யாவரும்:
நாரா: 175
(குழப்பந் தீர)
சொல்லுதி.
(சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ)
சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்!
(கைகூப்பி)
சேவ:
அறியா ருனையார்? அறிவார் யாரும்.
(முற்றிலும் அமைதி பிறக்க)
நாரா:
அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு!
சேவ:
நாரா:
சேவ:
பாத்திர மோதும் பரிவிற் கித்தனை!
காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ!
கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை!
ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன்
185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை.
அளிப்பிரோ அறியேன்?
(படைஞர் நெருங்கிச் சூழ) அளிப்போம் உயிரும்!
பாத்திரம் - தகுதி. 'கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை' என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை" என்னும் பழமொழியைக் குறிக்கிறது.