280
நாரா:
பலதே:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர். யாதோ உண்மை?
(இருவரும் நடந்து) ஓதுவம். வாவா!
265 நன்றிது: தீதிது: என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால்
தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே.
1
(நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக)
என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன்
பொன்னோ பொருட்டு?
(பலதேவனும் குடிலனும் வெளியே வந்து)
குடி:
போ! போ! மடையா
270 உன்னினன் சூதே.
பலதே:
உன்குணம். நாரணன்
சொன்னது கேட்டிலை?
குடி:
சொல்லிற் கென்குறை?
முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன்,
சேவ:
குடி:
(சேவகன் வர)
மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம்.
வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்?
சேவ:
275 போயினர்.
குடி:
ஓ! ஓ! போ இதோ வந்தோம்.
(சேவகன் போக)
(தனதுள்)
ஆயின தென்னையோ அறிகிலம். ஆயினும் சேயினும் எளியன். திருப்புவம் நொடியே.
2
நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று.
(குடிலனும் பலதேவனும் போக)
தேற்றம் - தெளிவு. பீதி -பயம். சேயினும் எளியன்- குழந்தையை
விட எளியவன்.