310
குடி:
புரு:
குடி:
50
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
சேரனே யாமிது செப்பினோன். போரினில் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன். (புருடோத்தமன் திரும்பிவர)
(தனிமொழி)
என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல். எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
(குடிலனை நோக்கி)
(குடிலன் எதிர்வர)
ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்!
அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை!
அநுகூலம் உரைத்தான்
சேரன் போர் தொடுத்தது கனவை
விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த தங்கிய. கௌவை துன்பம். ஜடிதி விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே.