உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

சகடன்: 150

நாரா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். 130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா

டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல்

135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140 போமா றொருசிறு புரையறு சுருங்கை.

நுமக்கும்.

அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே.

145 இதுவே என்னுளம். இதுவே நமது

மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா)

உரையீர் சகடரே உமதபிப் பிராயம்.

அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! (தனதுள்)

மருகன் தப்பிய வருத்தம் போலும்.

1

அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய - பற்றிய. கௌவை துன்பம். ஆஞ்ஞை கட்டளை. தெருள்உறு

தெளிவுள்ள. சூழ்ச்சி - யோசனை.