உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நூல் வெளியீடு

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

ஒவ்வொரு தொழிற்கும் ஒவ்வொரு தனித்திறன் உள்ளது. நூல்வெளி யீட்டுத் திறனை இயற்கையாகவே முற்றும் பெற்றவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளை. தமிழ்நூல் வெளியீட்டிற்கென்றே, திரு. வ. சுப்பையாப் பிள்ளை இறைவனாற் படைக்கப்பட்டுள்ளார் என்பதை, கடவுள் நம்பிக்கையுள்ளவர் அனைவரும் ஒப்புக்கொள்வர். வெளியிடவேண்டிய பொருட்டுறைகளைத் திட்டஞ் செய்தலும், ஒவ்வொரு துறையிலும் வல்லுநரைத் தேர்ந்து தெளிதலும், அவரை வரிசையறிந்து போற்றலும், தெளிவாகவும் திருத்த மாகவும் சிக்கனமாகவும் அச்சிட்டுக் கண்கவர் கவின் கட்டடஞ் செய் வித்தலும், தக்க அதிகாரிகளை எளிய முறையில் வயப்படுத்தலும் விற்பனைக்கு வலக்காரமான வழிகளையெல்லாங் கையாடலும் நேர்மை விலைக்கு விற்றலும் ஆகிய வினைகளில், மேலையரும் அவரிடம் வந்து பயிற்சி பெறுமளவு அவர் தேர்ச்சி பெற்றவராவர். இதுகாறும் வெளி யிடப்பட்ட பொத்தகங்கள் ஏறத்தாழ ஈராயிரமாயிருக்கலாம். அவற்றுட் சில ஆங்கில நூல்கள்.

'செந்தமிழ்ச் செல்வி' ஒரு தனியிதழ்போலத் தோன்றினும், அதுவும் நூல் வெளியீட்டின்பாற்பட்டதே. அதில் வெளிவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பெரும்பாலும் நூற்றிறன் வாய்ந்துள்ளமையால், மாதந்தொறும் விலையாகாத இதழ்கள் ஆண்டு வாரியாகக் கட்டடஞ் செய்யப்பட்டுப் பிற பொத்தகங்கள் போன்றே விற்கப்படுகின்றன.

எத்துணையோ நூல்கள் நீண்ட காலமாக அச்சீடின்றி யிருந்தமை யால், அவற்றின் பழம்படிகள் பழம்பொத்தகக் கடைகளிற் செல்வரே வாங்கத்தக்க கடுவிலைக்கு விற்கப்பட்டன. 'ஆயிரத் தெண்ணூறாட்டை முற்றமிழர் (Tamils, Thousand and Eight Hundred Years Ago) என்னும் ஆங்கில நூல் திரு. வ. சுப்பையாப் பிள்ளையால் வெளியிடப்பெற்று 12 உருபாவிற்கு விற்கப்பட்டபோதும், அதை அறியாத ஒரு மேலைச் செல்வர், அதன் பழம்படியொன்றை, மூர் அங்காடியில் 600 உருபா கொடுத்து வாங்கிச் சென்றார். இதிலிருந்து, திரு. சுப்பையாப் பிள்ளையின் நூற்பதிப்புத் தொண்டின் பெருமையை உணரலாம்.

இதுபோது, தமிழ்நூல்களுட் பெரும்பாலனவற்றை வாங்கக்கூடிய பொத்தக விற்பனை நிலையம் சை. சி. நூ. ப. கழகம் ஒன்றே. பிறர் வெளியீடு களும் அதன் வாயிலாகப் பெறலாம். ஆகவே, அது இன்று மாக்குமில்லன் (Mac Millan & Co.), இலாங்மன்சு (Longmans Green & Co.), இகின்பாதம் (Higginbotham) ஆகிய மூன்று ஆங்கிலக் குழும்புகளும் ஒன்றுசேர்ந்த தொக்கும். ஆதலால், ஒப்புயர்வற்ற உலகமாபெரு வெளியீட்டகம் இதுவே. மறைமலையடிகள் நூல்நிலையம்

சிவக்கொண்முடிபு (சைவசித்தாந்த) நூற்பதிப்புக் கழகத்தைச் சேர்ந்ததும், பொதுமக்கட்கு மிகப் பயன்படுவதும், திரு. வ. சுப்பையாப்