உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

10

செந்தமிழ்ச் செல்வி'க்கு உட்கரணம் கெட்டதா?

தமிழ்நாட்டிற் பொதுவாக முதுவேனிற் காலத்தில் தாங்கொணா

வெப்பமிக்கு,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

தானலந் திருகத்தன்மையிற் குன்றி

முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

பாலை யென்பதோர் படிவங்" கொள்ள.

மருத நெய்தலையும் வாட்டி வருத்துவது தொன்று தொட்ட மரபே. யின், கடந்த வேனிலில் ஏனையோர்க் கெல்லாம் உடம்பு மட்டும் தாக்குண்ண, தாமரைச் செல்வர். திரு. வ. சுப்பையா (ப்பிள்ளை) அவர்கட்கு உட்கரணமும் தாக்குண்டது மிகமிக இரங்கத்தக்கதாகும். இல்லெனில் கடந்த 'செந்தமிழ்ச் செல்வி' (சிலம்பு : 52; பரல் : 9)-ல் 'தமிழில் பல துறை அறிவியல் நூல்களை ஆக்கும் முறை' என்னும் தலைப்பில் குழப்பமான, அறிவுக்குப் பொருந்தாத பல போலிக் கருத்துகளை வெளிப்படுத்தியிரார்.

மேலையறிஞர் திங்கள் செவ்வாய் மண்டிலங்களையடுத்தும், மேலை மொழிகளில் புதுப்புதுப் பல்துறை அறிவியல் நூன்மணிகள் மேன் மேலுங் குவித்து வருவதும் ஏனையோரும் ஏற்கனவே அறிந்தனவே.

தமிழில் அறிவியற் கலைக்குறியீடுகள் போதிய அளவிற்கு ஆக்கப் படவில்லையென்பதும், அரசும் பல்கலைக் கழகங்களும் இதில் ஒரு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை யென்பதும், இந் நிலைமை நீடிப்பின் தமிழினம் இருளில் அழுந்தும் என்பதும் அறிந்தே உலகத்தமிழ்க் கழகம் தோற்று விக்கப்பட்டுள்ளது. அதைத் தாமரைச் செல்வர் ஊக்கியதுமில்லை; அதன் மாநாடுகளில் உருக்காட்டியதுமில்லை.

பிற நாடுகளிற் கல்விவாயில் எம்மொழி யென்பதும், அதன் அமைப்பு எத்தகைய தென்பதும், அந் நாடுகட்குச் சென்றுதான் அறிதல் கூடும் என்பதில்லை. ஞாலநூல் (geography), வரலாற்று நூல், மொழிநூல், செய்தித்தாட்கள் ஆகியவையே செவ்வனே அறிவிக்கும்.