உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

முதற்படை:

3-ம் படை:

இத்திரை தாய்க்காம்.

சீ! சீ! அத்திரை.

325

2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்?

முதற்படை:

3-ம் படை:

முதற்படை:

20

2-ம் படை:

3-ம் படை:

முதற்படை:

25

இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்?

அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் (3-ம் படைஞன் மற்றோரிடம் போக)

ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை

(3-ம் படைஞன் மீண்டும் வர)

(முதற்படைஞனை நோக்கி)

இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம்

நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர்

30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம்.

சரி! சரி!

பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை

விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான்.

காட்டல் - பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும்

ஒப்பில்லாத.