உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றிணை தெளிவுரை ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை உள்ளினேன் அல்லெனோ, யானே- உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே? 15 நெஞ்சமே! பார்ப்பை ஈன்ற பருந்தானது அந்த வருத்த முடன் தங்கியிருக்கும். வானத்தைப் பொருதுமாறுபோல வளர்ந்து உயர்ந்த நெடிய கிளையினையும், பொரிந்த அடியினையும் கொண்ட வேம்பின து புள்ளிபட்ட நீழலினிடத்தே, கட்டளைக் கல்லினைப் போலத் தோற்றும் இட்டரங்கினைக் கீறிக்கொண்டு, கல்லாமையினயுைடைய சிறுவர்கள் நெல்லிவட்டினை ஆடிய படியிருக்கும். விற்போரால் ஆறலைத்து உண்டு வாழுகின்ற மக்களின் வெம்மையான குடியிருப்பையுடைய சிற்றூரினிடத்தே, சுரத்தின் கண்ணே வந்ததும், நம் வலியனைத்தையும் மாயச் செய்ததுமான மாலைக்காலத்திலே, 'நினைத்த செயலைச் செய்து முடித்தாற்போன்ற இனிமையினைத் தருபவளான நம் தலைவியானவள், மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்தவளாக அதன்முன் நின்று, நம்மை நினைந்து துன்புறும் மாலைப்பொழுது இதுவாகும்" என யானும் அவளை நினைத்தேன் அல்லனோ! " கருத்து: "என் நிலைமை அவ்வாறாக, யான் இனியும் எவ்வாறு பிரிந்து போதற்குத் துணிவேன்' என்பதாம். சொற்பொருள் : உயவும் - வருந்தியிருக்கும். கட்டளை கட்டளைக் கல்; இதனைப் பொன்னை உறைத்துக் காணும் கல் எனவும் கூறுவர். மலைப்பாங்கில வட்டரங்கு இழைத் திருந்த காட்சி, கட்டளைக் கல்லிலே பொன்னை உறைத் தாற் காணப்படும் வரைகளையொப்ப விளங்கிற்று இட்டரங்கு - பகுப்புக்கள் இடப்பட்டிருக்கும் வட்டாடும் அரங்கு. உரன் - ஆற்றல்; வலிமை. மனைமாண் சுடர்- அந்தி விளக்கு; மனைக்கு மாட்சிதரும் மங்கலச் சுடர்விளக்கு. என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/16&oldid=1626511" இலிருந்து மீள்விக்கப்பட்டது