உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள்: மாயோன் - வாசுதேவன். வாலியோன் - பலராமன். இவரது திருமேனி வண்ணங்கள் முறையே கருமையும் வெண்மையும் ஆகும். நாடல்- ஆராய்தல்.

விளக்கம்: 'மலைகிழவோன்' என்றாள், தலைவனின் தகுதி மேம்பாட்டை உணர்த்துதற்கு. 'அவன் நம் நயந்து என்றும் வருந்தினன்' என்றாள். அத் தகுதியுடையோனை அடைதல் தமக்கு நல்வாய்ப்பாக இருப்பவும், அதனைத் தெளியாதே அவனை வருந்தச் செய்த தலைவியது அறியாமைக்கு இரங்கியதனால், 'ஓர் வாய்ச் சொல்-ஒப்பற்ற வாய்மையுடைய சொல்; இவ்வாறு, தான் அவனது நிலையை முற்றவும் ஆய்ந்து தெளிந்தே, அவனுக்குக் குறை நேர்ந்த தனைக் காட்டுதற்காம். 'நீயும் கண்டு' என்றது, கண்டால் நின் மனமும் தானே அவன்பாற் சென்றுவிடுகின்ற தன்மை யினை அடையும்; அவன் அத்தகைய பெருவனப்பினன்' என்று கூறியதாம். 'நுமரொடும் எண்ணி" என்றது, தன் சொற்களை ஏற்காததற்குப் புலந்து தன்னைப் பிறளாகக் கொண்டு கூறியதாம்.'அறிவறிந்து அளவல் வேண்டும்' என்றதும், மறுத்தரற்கு அரிய வென்றதும், மறுப்பின் உண்மை அன்பினனான அவன், தான் மடலேறுதலையும் செய்வான் என்னும் உறுதியினால் ஆகும். 'பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு ஒட்டியோர் திறத்தே நாடார்" என்றது, உலகினர் ஆய்ந்து தெளியும் இயல்பினைக் கூறியதாம்.

இதனைக் கேட்கும் தலைவி, தன் தோழியின் உரையி னாலே தனக்கு நன்மையே வந்து சேரும் எனத் தெளிந்தா ளாய்த் தலைவனை விருப்புடன் ஏற்பாள்' என்பதாம்.

மேற்கோள் : இது 'கையுறை ஏற்பத் தலைவிக்குத் தோழி கூறியது' எனவுரைப்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ 114 உரை மேற்கோள்). பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் தோழிக்குக் கூற்று நிகழ்வதற்கு இச் செய்யுளை இளம்பூரணனார் காட்டுவர் (தொல். பொருள். சூ. 11 உரை மேற்கோள்).

33. மல்கு புனல்!

பாடியவர் : இளவேட்டனார். திணை : பாலை. துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/67&oldid=1627189" இலிருந்து மீள்விக்கப்பட்டது