உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

நற்றிணை தெளிவுரை


இப்படி உரைக்கின்றாள். காவலரால் ஏதம் நேரும்' எனத் தாம் அஞ்சியதும் இதனாற் கூறுகின்றனளாம்.

99. மடவ மலர்ந்தன!

பாடியவர் : இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.

[(து–வி) தலைவன் சொன்னபடி வாராது காலந்தாழ்த்த நினைவால், தலைவியது காமநோய் பெருகத் தொடங்குகின்றது. அதனைக் கண்ட தோழி அவளது துயரத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள்.]

"நீர்அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின் மடந்தை–மதிஇன்று, 5
மறந்துகடல் முகந்த கமஞ்சூழ் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
'கார்' என்று அபர்ந்த உள்ளமொடு, தேர்வில
பிடவமும், கொன்றையும், கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே! 10

மடந்தையே! நெறியானது முற்றவும் நீரற்றுப்போனதாகவும், வறட்சியுற்றதாகவும், கடக்க இயலாததாகவும் காணப்படுவதாம். வெண்ணிற ஆடையினை விரித்துப் போட்டிருந்தால் ஒப்ப, அதனிடத்து வெயிலானது மிக்குப்படர்ந்து பரவியும் நிற்கும். காண்பாரை அச்சமடையச் செய்து நடுக்கத்தை உண்டாக்கும் அத்தகைய வெம்மை மிகுந்த சுரத்தினைத் தலைவரும் கடந்து சென்றுள்ளனர். அழகு பொருந்தும்படியாக நம்மைத் தெளிவித்து மீண்டும் வருவதாக அவர் குறித்துச் சென்ற பருவமும் இதுதானோ என்று நீயும் வினவுகின்றனை. முகத்தற்குரிய பருவத்தை மறந்ததால் அறிவுணர்ச்சி இல்லாது போயின மேகமானது, கடனீரைச் சென்று முகந்துகொண்டதாய் நிறைசூலுற்றுக் கார்மேகமாகவும் ஆயிற்று. மேலும், நீர்ச்சுமையினைத் தாங்கமாட்டாமையினாலே வளமான மழையாகப் பெய்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/195&oldid=1687577" இலிருந்து மீள்விக்கப்பட்டது