நற்றிணை தெளிவுரை
269
கருத்து : 'மழையே! எனக்கு உதவிய நின்னைப் போற்றுவேன்' என்பதாம்.
விளக்கம் : உலகை உருளாகவும், அந்த உருளிற் பொருந்தி ஆதாரமாக விளங்கும் கடையாணியாக மழையினையும் கொள்ளுக. 'பலர்' என்றது, பற்பல நாட்டினரையும் ஆம். மழையைப் பலரும் தொழுதல், அதனாற் பெற்று வாழ்கின்ற பெரும்பயனுக்கு நன்றிகடனாக கார்காலத்தே மீண்டுவந்து இன்புற்றிருக்கும் தலைவனும் தான் பெறுகின்ற இன்பத்தை நினைந்து மழையை வாழ்த்துகின்றான் எனலாம். 'முழவின் மண்ஆர் கண்ணின் இமிரும்' என்ற நினைப்புத் தலைவன் அரசவினையினை மேற்கொண்டு சென்று வெற்றி முழக்கோடு திரும்பியவன் என்பதனைக் காட்டுவதாகும்.
உள்ளுறை : உலகிற்கு ஆணியாக விளங்கும் மழையினது தன்மைபோலத் தன் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது தலைவியது தண்ணளியோடு கூடிய கூட்டம்' என்பதாம்.
140. இன்னும் இரப்பாம்!
- பாடியவர் : பூதங்கண்ணனார்;
- திணை : குறிஞ்சி.
- துறை : துறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.
[(து–வி.) தோழிபாற் குறையிரந்து நின்று, அவளால் மறுத்துரை கூறப்பெற்றுத் தளர்த்த தலைவன், தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.]
கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
5
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளாள் ஆயினும், பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா!—நெஞ்சே—என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லை, யான்உற்ற நோய்க்கே.
10