உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு ஆரிய மயக்கம் சிறிதளவு தெளிய ஆரம்பித்தது கல்வி நீரோடையின் காட்சியைக்காண், படிப்புவராத இனத்தில் குறைந்த அளவு எண்ணிக்கையினர், நீரோடை அருகில் சென்றனர்; நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவுபட ஆரம்பித்தது. ஆரிய இரு ளால் சூழ்ந்து கிடந்த தமிழ் வானத்தில் ஆங்கிலக் கல்வி என்னும் விடி வெள்ளி தோன்றலாயிற்று. வேதம் விதித்த ஆசாரங்களை விண்ணிலே பறக்க விட்டனர் வேத வித்துக்கள், வடமொழி ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்து விட்டது. வேதங்களைப் பாராயணம் செய்த வாய் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு பாராயணம் செய்ய முனைந்து விட்டது. வால்மீகியை செய்து கொண்டிருந்தவர்கள் ஓமரை ஸ்டீரிக்க ஆரம்பித் தனர். சாகுந்தலம் கற்பதை வீட்டு ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கற்க முற்பட்டனர். மானம் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை சேவித்து வந்தவர்கள் வெள்ளைக்கலைக்டர் துரையைச் சேவிக்கத் தலைப்பட்ட னர். பிரம்மாவையும் ருத்திரனையும் தோத்தரித்து வந்தவர் கள் கவர்னர் துரையையும் வைசிராய் பெருமானையும் வலம் வர ஆரம்பித்து விட்டனர். உச்சிக் குடுமி இருந்த சிரசில், அத்துடன் கிராப்பும் இடம் பெற்றது. பஞ்சகச்சம் டிரவுசரால் மறைக்கப் பட்டது. பிறந்த மேனி சொக்காயால் மூடப்பட்டது. மாட்சிமை பொருந்திய மன்னர் பிரான் சர்க்கார் ஒழுங் காக் நடைபெற ஆரம்பித்தது.

42


42