உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை கம்யூனல் ஜி.ஒ.வெளி வாழ்க்கையில் மட்டும் நம் மவர்களுக்குச் சிற்சில நன்மைகளைக் கொடுத்து விட் டிருப்பதாக மட்டுமே கொள்ள வேண்டாம். மன நிலை யிலும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொடுத்திருக் கிறது என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். நம்மவர்களிலே சிலர் படித்துப் பட்டம் பெற்றிருப் பதும் பெறுவதும், சிலர் சர்க்கார் உத்தியோகங்களிலே அமர்ந்திருப்பதும்-அமருவதும் மட்டுமே நமது கண் களுக்குப் படுகிறது. வெறுங்காட்சி அளவோடு அது நின்று விடவில்லை. மறக்க முடியாததும், மறுத்துரைக்க முடியாததும், ஈடும் எடும்பும் இல்லாததுமான ஒரு உண்மையை நிலைநாட்டி இருக்கிறது என்பதை, நம்மில் பலர் உணரவில்லை. அதாவது பார்ப்பன இனத்துக்கே படிப்பு வரும். நம்மவர்க்கு வராது; பார்ப்பன் இனத் துக்கே தகுதி, திறமை உண்டு; நம்மவர்க்குக் கிடை யாது; என்ற பித்தலாட்டமான சித்தாந்தத்தைச் சுக்கு நூறாக்கி, நல்ல அளிக்கப் பட்டால் நம்மவரும் பின் மாட்டார்கள் என்ற பேர் உண்மையை நிலை நாட்டி இருப்பதாகும். இதன் சரிவபுலனைப் பிராம்மணீய ஏற்பாடு மணல்மேடு சரியவும், சனாதனத்தின் அஸ்திவாரம் ஆட்டங் கொடுக்கவும், அது இருந்த இடத்தில் ஜனநாய தக் கோட்பாடு முளைக்கவுமான புதிய நிலை-- வரவேற்கத் தகுந்த நல்ல நிலை ஏற்பட்டு இருக்கிறது.

51


51