உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாதுரை கொள்வதுகூட, இன்னமும் கஷ்டமாக இருக்கிறது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, எந் அக்காலத்திலும் சரி, அந்தச் சுரண்டல் இயந்திரத்திற்கு அவசியமே இருந்ததில்லை. அவசியமில்லாத ஒன்றை, அதனால் ஆதிக்கமும் வாழ்வும் பெற்றவர்களும் பெற்றுக் கொண்டு இருக்கிறவர்களும், அதனை கைவிட மறுக் கிறார்கள் என்றால், அதில் பொருள் உண்டு. ஆனால். அதனால் பாழ்பட்டவர்கள், அடிமையாகக் கிடக்கிறவர் கள் கூட, அதனை, உதறித் தள்ள முன்வராமல் இருப்பது வேதனை தரும் விசித்திரம்தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாக, அதன் கொடுமையை அனுபவித்து வருகிறவர். கள், ஆத்திரம் காட்டவில்லை, அந்தக் கூடாத கோட் பாட்டை அழிக்க. அவர்கள் காணட்டும், அவர்களுக்குக் கண்ணும் கருத்தும் கெடாமல் இருந்தால், ஏதோ ஒரு சிறு அள தில தங்கள் இனத்தின் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒரு பாதிக்கப்படுகிறது என்ற காரணத்துக்காக, கம்யூனல் ஜி.ஒ.ஒழிப்புக்கு, பாடுபட்டதையும்-கிளர்ச்சி செய்ததையும் - முடிவில் வெற்றிபெற்று மகிழ்வதையும். கம்யூனல் ஜி.ஒ.வின் அடிப்படை இலட்சியம் இன் னும் முழுஅளவில் நிறைவேறிவிடவில்லை. அதன் விடு தலை,பண்பாடு இன்னும் பட்டுப்போகவில்லை பசுந்தளிர் போன்ற நிலையில்தான் இருக்கிறது. இன்னும் சிறிது காலத்திற்குகம்யூனில் ஜி. ஒ, விற்கு அவசியமும், தேவை யும் இருக்கிறது. மக்களாட்சி முறைக்குத் தேவைப்படு

53


53