நற்றிணை நாடகங்கள்
என்று வேண்டவேண்டும். (வெளிப்படை) நாணினும் சிறந்தது கற்பன்றோ ? தைந் நீராடி வழிபடும் பாவைக் கடவுளையுமா பழம்பாட்டுப் பாடி ஏமாற்றுவாள்? எங்கள் தலைவியை நாங்கள் அறியோமா? அவ்வாறு வஞ்சனை செய்யாள்.
அவன்: யான் என்ன, இறைவியையும் "வஞ்சிக்கிறாள்" என்றா சொன்னேன்?
தோழி:
"நல்ல கணவனை நாளை நீ தாராயோ
எல்லாமுன் அன்பன்றோ அருளேலோ ரெம்பாவாய்"
என்று பாடுவாளா?
அவன்: உங்கள் பாட்டு வேறு; அவள் பாடுவது வேறு.
விரும்பிப்போத் தந்திவன் தழையுந்தா ருந்தந்தான்
வருவதெலாம் நின்னருளே வாழியேலோ ரெம்பாவாய்"
என்று பாடியே முழுகுகின்றாள்.
தோழி:
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
என்பதன்றோ கற்பு நெறி? கணவனை அறிந்தபின் கடவுளைத் தொழுவது கற்பு நெறியோ?
அவன்: கடவுளைத் தொழுவதும் கற்பு நெறியே. கணவனை விட்டுத் தனியே வேண்டுகோள் விடுத்துத் தொழுவதே வேண்டாதது. கணவனோடு கூடி வேண்டுவது, தவறன்று. இங்கே, வேண்டுகோள் இல்லை உள்ளது நன்றியறிவே; அதிலும், வியப்புடன் எழும் நன்றியறிவு.
தோழி: வியப் பொன்றோ !
104