வல்லிக்கண்ணன்119
சிரிக்கிறதும் சினிமாப் பாட்டு பாடுறதுமா இருந்தது...” என்று இழுத்தான்.
“எந்த மூக்கன் பய?”
“ஆசாரிப் பையன். சிவப்பா, உயரமா, கொஞ்சம் தடியா நம்ம தெருவிலே அடிக்கடி லாத்துவானே...”
“ஓ அவனா? சரி சரி.”
“சில நாளிலே நீலாவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் டூாிங் சினிமாவுக்குப் போறது உண்டு. அப்போல்லாம் மூக்கன் பயலும் படம் பார்க்க வருவான்னு சிலபேரு சொன்னாங்க. இவங்க பக்கம் வந்து பேச்சுக் கொடுக்கிறது, சிரிக்கிறதுன்னு...எப்படியோ, அண்ணாச்சி ரெண்டு பேருக்கும் சினேகம் ஏற்பட்டிருக்கும்னு எனக்குத் தோணுது...”
“இப்போ என்ன செய்யனுமின்னு விரும்புறே என்னை ஏன் தேடி வந்தே?” என்று முத்துமாலை கேட்டான்.
“எனக்குத் தோணுது, நீலாவும் மூக்கன் பயலும் சேர்ந்துதான் போயிருக்கணும். எங்கே போயிருப்பாங்க? டவுனுக்குப் போயி, ராத்திரி எங்காவது லாட்ஜிலே தங்கியிருப்பாங்க. பகல்லே அல்லது அதிகாலையிலே பஸ் புடிச்சு மதுரை, குற்றாலம்னு போனாலும் போவாங்க...நாம டவுனுக்குப்போகணும்.பஸ் ஸ்டாண்டிலேயே துப்புக் கிடைச்சாலும் கிடைக்கும். நீங்க என் கூட வந்தா எனக்கு ஒரு தைரியம் ஏற்படும். அந்த மூக்கன் பயலை எங்கே கண்டாலும் மடக்கி...”
“சரி, புறப்படு” என்று உடனே கிளம்பினான் முத்துமாலை.