உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

25

செய்த தொண்டு எல்லை கடந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டு களுக்கும் எண்ணிப்பார்ப்பதாய்ப் பயன்படுவதாய் இருக்கும். இவ்வகையில், தமிழ்மொழியும், தமிழ்நாடும், தமிழ் இனமும் உள்ளவரை ‘உள்ளவராய்’ வாழும் பெருமையைத் தம்மோடு சேர்த்துக்கொண்ட பெருந்தகை தாமரைச் செல்வர் வ.சுப்பையாபிள்ளை ஆவர். தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றைத் தோற்றுவிக்காத தமிழகத் தீயூழுக்கு இடையே நல்லூழாக வாய்த்தவர் அத் திருவாளர்! அவர் வாழ்வாராக! மனிதரைத் தேடித் தேடிக்கண்டு, “மூலையில் இருந்தாரை முற்றத்தில் வைத்த சாலப் பெரிய" ராம் அவர் நெடிதூழி வாழ்வாராக!