உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

'எனக்கு விழா எடுப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால் இந்த விழா ஏன் எடுக்கப்பட்டது என்றால், நான் எப்படியெல்லாம் பெரும்புலவர்களோடு தொடர்பு கொண்டேன் என்பது அவர் களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே. நூலாசிரியர்களுக் கெல்லாம் எழுதி அவர்கள் கருத்தை அறியச்செய்து அதன் மூலம் அவர்களும் என்னைப்போல் பெருமக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெறவேண்டும் என்பதற்காகவும், என்னைப்போல் அவர்களும் ஊக்கம் பெறவேண்டும் என்பதற்காகவுமே இவ் விழா எடுக்கப்பட்டதே அன்றி எனது பெருமையைத் தெரிவிப்ப தற்காக அன்று."

இப் பொழிவு மணிகளும், ஏற்புரை மணிகளும் மேல்வரும் வரலாற்றின் மேல்வரிச் சட்டம் போல்வனவாம்.