உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

211 டோர் உதடசைத்துக் கேலி செய்யப் பரூக் உலவிக் கொண் டிருக்கிறான். பழுதுபட்ட படைக் கலங்களை விற்ற அந்த 'பரம தயாளர்' எங்கே இருக்கிறார்கள், தெரியுமா? • பாதகம் விளைவித்த பரூக், பட்டமிழந்தான் - காதகர்கள் கெட்டொழிந்தனர் - ஓட்டை ஒடிசலை' விற்ற அந்தப் படுபாத கர்கள், என்ன ஆயினர்? கோடிக்கணக்கான பொருள் நஷ்டம் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான அரும் உயிர்களைக் குடித்த, அந்தக் கொடியவர் கள், கண்டு பிடிக்கப்பட்டு, நானிலம் காரி உமிழத்தக்க நிலை பெற்றனரா? எங்கே உளர் அந்த எத்தர்கள்? என்ன கதிக் குத் துரத்தப்பட்டனர்? கண்டித்தால் மட்டும் போதாதே அந்தக் கயவர்களை, கடுமையாகத் தண்டிக்கவும் வேண்டுமே! பழுதுபட்ட படைக்கலனை விற்பனை செய்த பாதகர் யார்? எங்கு உளர்? என்று கேட்டுப்பார், தம்பி/ காங்கிரஸ் நண்பர் களை / கோபம் பிறக்கும்! அனியாயமாக ஆயிரமாயிரம் உயிரைப் பலிவாங்கிய அந்தப் பாதகர்கள், இப்போது!'பாரத நாட்டிலே' இருக் கிறார்கள், தம்பி! "கைதிகளாகவா?" என்று கேட்கிறாய் உன் நெஞ்சில் நேர்மை அவ்வளவு சுரக்கிறது! நேரு மகான், அவர்களைக் 'கைதிகளாக' அல்ல, ஆசிரியர்களாக இங்கு அமர்த்தி வைத்திருக்கிறார்! அக்ரமம், அனியாயம் அடுக்காது - என்றெல்லாம்! என்னைப் பார்த்து முழக்க மிட்டு என்ன பலன், தம்பி; இந்திய சர்க்காரின் ஆதர வில் அரவணைப்பில், அந்த 'ஆயுத கர்த்தாக்கள்' இப்போது இருக்கிறார்கள். ஈஜிப்ட் நாட்டுக்கு, 'பழுதுபட்ட போர்க்கருவிகளை விற்பனை செய்த மகானுபாவர்கள், சுவிட்சர்லாந்து நாட் டுக் கம்பெனியார். 'பாரத நாட்டுக்கு, படைக் கருவிகள் தயாரிக்கும்தொழி லகம், சர்க்காரால் அமைக்கப்பட்டு, இதுவரை ஏராளமான பொருளை விழுங்கி இருக்கிறது. இந்தத் தொழிலகத்தில் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், ஆயுத உற்பத்திக்கான 'அருங் கலை'யைக் கற்றுத் தரவும், பெரும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அமர்ந்திருப்பவர்கள், இந்த சுவிட்சர்லாந்து கம்பெனியைச் சேர்ந்தவர்கள். எந்தக் கம்பெனி, கொள்ளை அடிக்கும் போக்கில்,ஈஜிப்ட் டுக்கு பழுதுபட்ட போர்க் கருவிகளை விற்பனை செய்து, அந்த நாட்டுக்குத் துரோகம் விளைவித்ததோ,அதே கம்பெனியினர் தான், இங்கு ஆயுதத் தொழிற்சாலைக்கு ஆசிரியர்கள்.