இயற்கை இன்பம்
17
பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன் - சீனி
பாகமாய்ச் செய்து கொடுத்துவந்தேன்;
நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்- குழாய்
நீராக வும்சென்று பாய்ந்து வந்தேன்.
6
மாங்கனி தேங்கனி வாரிவந்தேன்-நல்ல
வாச மலர்களும் அள்ளிவந்தேன்;
தீங்கரும் பாயிரம் தள்ளிவந்தேன் - மிகத்
தேனும் தினையுமே சேர்த்துவந்தேன்.
7
அல்லும் பகலும் அலைந்துவந்தேன் - எங்கள்
ஆழி இறைவனைக் காணவந்தேன்;
நில்லும் எனக்கினி நேரமில்லை - இன்னும்
நீண்ட வழிபோக வேண்டும் அம்மா!
8
20. கடல்
[கற்களும் பாறைகளும் அடர்ந்த கடற்கரையில், கடல் கொந்தளிப்பாயிருந்த தருணத்தில், மணலிலே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது.]
எல்லை அறியாப் பெருங்கடலே! - நீதான்
இரவும் உறங்காயோ?கடலே!
அல்லும் பகலும் அலைகடலே!- உனக்கு
அலுப்பும் இலையோ? கருங்கடலே !
1
உருண்டு திரண்டு வருங்கடலே ! -உடைந்து
ஓடிப் போவதேன்? கடலே!
வெருண்டு மதிகெட் டாய்கடலே! பாறை
விலகிப் போகுமோ? கடலே!
2