உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்[1].

இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான்[2] என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது[3] என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.

நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள்

'கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்'[4] என்றும், 'பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்' [5] என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.

இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்,[6] முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்,[7] இவனது படை வரிசை வரிசையாக வந்தது.[8] நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.[9] நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.[10] அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்[11]. படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்[12]. வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்[13]. இவ்வகைச் செய்திகள்


  1. 'அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்' (பதிற். பதி. 2 : 10 – 12)
  2. பதிற். 11 : 23 - 24
  3. ஷை 17 : 10 - 15
  4. ஷை 14 : 10
  5. 'அணங்குடை நோன்றாள்', (பதிற். பதி. 2 : 12)
  6. 'எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலம்', (பதிற். 14 : 11, 16 : 17)
  7. 'வயவர்' பதிற். 12 : 1, 19 : 7, 'வயவர் வேந்து', (பதிற். 15 : 21)
  8. 'போரடு தானை', (பதிற் 11 : 16), 'நிரைய வெள்ளம்', (பதிற். 15 : 4)
  9. 'பசும்பூண்மார்பன்', (பதிற். 17 : 14)
  10. 'போர்வல் யானைச் சேரலாதன்', (பதிற். 15 : 23, 11 : 14 - 16)
  11. 'புரையோர் உண்கண்', (பதிற். 16 : 18)
  12. 'சான்றோர் மெய்ம்மறை', (பதிற். 14 : 12)
  13. 'படையே குழவ பாடினி வேந்தே', (பதிற். 14 : 17)