இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்கை இன்பம்
27
கானத் தினைப்புனத்தில் - குறமகள்
காவலிற் கொள்ளையிடல்
ஈனச் செயல் அல்லவோ? - குலத்துக்கு
இழுக்கமும் வந்திடாதோ?
12
செம்பவழ வாயைத் - திறந்து நீ
செப்பு மொழிகேட்கில்,
உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து
ஓடி யொழுகும், அடி!
13
கொம்பிற் கொலுவிருந்து - களித்து நீ
கூவுங் குரல்வருமேல்,
பம்பி யெழுஞ்சோலை - எனக்குப்
பரம பதம், அடியோ!
13
உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகொளவே,
பண்ணிற் கலந்திடநீ - தெரிந்துசெய்
பக்குவம் ஏதடியோ?
14
பேசும் மரகதமே! உனைத் தினம்
பேணி வளர்த்திடுவேன்;
ஆசை யமுதமொழி - அளிக்க நீ
அண்டையில் வந்திடாயோ?
16
பண்ணுக் கிசைந்ததம்மா! - பழத்தொடு
பாலுங் கலந்ததம்மா!
மண்ணுக் கமுதமம்மா! - உனது செவ்
வாய்மொழி, தத்தையம்மா
17