இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பஞ்சாமிர்தம்
55
அகில் விறகை மாட்டி
அடுப்பில் எரி மூட்டி,
பகவன் அடி போற்றிப்
பானையேற்றி வைப்போம்.
7
தங்கத்தினால் பானை,
தரளம் என அரிசி.
பொங்கலும்பால் பொங்கல்,
புத்தமுதப் பொங்கல்!
8
பானையுமே பொங்கிப்
பால்வடியும் வேளை,
வானம்எழக் குரவை
வழங்கிவலம் வருவோம்.
9
கடவுட்கமு தளிப்போம்;
காகத்துக்கும் இடுவோம்.
உடனிருந்தெல் லோரும்
உண்டுமகிழ்ந் திடுவோம்.
10
49. தீபாவளிப் பண்டிகை
தொழிலாளி பாட்டு
பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் - இந்தப்
பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;
தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்,
சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம்.
1
ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! - அதை
ஆண்டியும் கொண்டாட வேண்டும்.அடா!
தீண்டு துயர்போகும் நாள் இதடா!-உள்ளம்
தேடித் தவித்திடும் நாள் இதடா!