உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 நம் மந்திரிகளின் கோலாகல வாழ்வு, அவர்கள். நடத்தும் அட்டகாசம், மக்கள் சர்க்காரிலே நடப்ப தாகவா இருக்கிறது? தேர்தலிலே வாக்குறுதி கொடுத்தவைகளில் ஒன்றான சம்பளக் குறைப்பை தாம் பதவிக்கு வந்த ஒரு சில தினங்களிலேயே நிறைவேற்றி இருக்கிறார் சர்ச்சில் ! சர்ச்சிலைக் கிண்டல் செய்த இந்நாட்டு ஆளுங்கட்சி யார், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எவ்வளவு நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது! நம் நாட்டு மந்திரிகள் நடன விழாவிற்குத் தலைமை தாங்கி நளின நடையில் பேசத்தான் கற்றுக் கொண்டி ருக்கிறார்களே தவிர, வேறு எதைச் செய்தார்கள்? தினந்தினம் திறப்பு விழாக்கள் ! ஆரம்ப வைபவங்கள்! அஸ்திவாரக் கல் நாட்டுகள் !-இவைகளைத்தானே செய்து கொண்டு வருகிறார்கள் இவர்கள். மக்களின் பகுத்தறிவுக்கு ஒவ்வாதப் பழக்க வழக்கங்களுக்குப் பாதுகாவலராக இருந்து வரும் இவர்கள் ஆட்சியில் உணவுப் பஞ்சத்தைவிட அறிவுப் பஞ்சம் தானே வளர வழி ஏற்படுகிறது. மதச் சார்பற்ற இவர்கள் ஆட்சியிலே மதச் சடங்குகளுக்கு மந்திரிகளே சூத்ரதாரிகளாக விளங்கினால் எப்படி ஆட்சி உயர்வடைய முடியும்? மக்கள் பகுத் தறிவுபெற முடியும்? வருஷப் பிறப்புக்குப் பஞ்சாங்கம் படிக்கிற மந்திரி கள் - 'இராம லீலா'வைக் கண்டு களித்துப் பரவசப்