இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடிதம் 101 அவர்கள் ஆடிய ஆட்டத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுந்தது, கிழவர், லாரியால் மோதப்பட்டு வேர் தடுக்கி விழுந்து மடிந்தார். சோதிடர் தலையிலோ கிளையே விழுந்து மாண்டார். கிழவர் பணியைத் தொடர் அவர் மகன் இருக்கிறான். சோதிடர் உடலை, மரத்தடியில் அனாதையாக விட்டு விட்டு, சீடகோடிகள் ஓடிவிட்டார்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு! இதுதான் சோதிடரின் கதை! அன்புள்ள, மு.க. 30-1-77.