உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளாயினி அழகான பெண். ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணிமாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை-தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித் தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது-வையத்து மண்ணுக்கு வரவிழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றி யது! அந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச் சிலையின் தலையிலே கூடை ; கூடையிலோ துர்வாடை! ஆமாம்-அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம். கூடையின் அடிப்புறத்தைத் தாங்கியிருக் கும் அவள் இளங்கரங்கள் சுமை தாங்காமல் நடுங்கிக் கொண் டிருக்கின்றன. ஆனாலும் அந்தச் சுந்தரவல்லி போய்க்கொண்டு தானிருக்கிறாள். சோகத்திலும் ஒரு சோபிதம் இருக்கிறது என்பதை அவளது எழில் வதனம் கவிஞர்கட்குக் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. கூடையிலே அமர்ந்துள்ள அழுகிய உருவமோ புன்னகை புரிந்தவண்ணமிருக்கிறது. அந்தப் புன்னகை எதையோ ஓர் இன்பத்தை எதிர்பார்த்து மலரும் புன்னகை. புன்ன கையில் விசாரத்தைக் காண வேண்டுமா ? ஆசைப்படுவோர் அந்த உருவத்தின் இனிப்பைப் பார்த்துக் கொள்ளலாம். கூடையிலே இருந்த அந்த உருவம் ஆண். தனக்கென உரிய உடலில் கால்