உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒருமனதாக இங்கே ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொலைகள் தொடர்கின்றன- இங்கே இருந்து சென்றவரைக் கூட அடையாளம் தெரியாத அள விற்கு கொன்று இருக்கிறார்கள் என்றால்,(எந்த அளவிற்கு தமிழர்களைப் படுகொலை செய்யும் நிகழ்ச்சிகள் அங்கே நடை பெறுகின்றன என்பதை யூகிக்க முடிகிறது. எனவே என்ன முடிவு எடுக்க இருக்கிறோம்? இதுபற்றி அரசு என்ன தகவல்களை பெற்று இருக்கிறது? சங்கரையா (மார்க்சிஸ்ட்) என். எஸ். வி. சித்தன் (இ. காங்): இது குறித்து நாங்களும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அவைத்தலைவர் அவைத்தலைவர்:- எதிர்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே இதை ஒத்திவைப்புத் தீர்மானமாக தரவில்லை. தெரிவித்துக் கொள்ளத்தான் எழுப்பியிருக்கிறார்கள். தகவல் எனவே ஒத்திவைப்புத் தீர்மானம் இப்பொழுது வேண் டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலமைச்சர் முதலமைச்சர்:-இலங்கை வெளிநாட்டு அமைச்சர் என்னிடம் தொலைபேசி மூலம் வேதனையோடு இந்தத் தகவலைத் தெரி வித்தார். இலங்கை-இந்தியா உறவைக் கெடுப்பதற்காக யாரோ சதி செய்வதாகக் கூறினார். தூதர் மூலமும் இதே செய்தியைத் தெரிவித்தார்கள். மாலையில் சடலம் வருவதாக செய்தி வந்திருக்கிறது. இந்தியப் பேரரசுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். முழுத்தகவல் வந்ததும் அவைக்குத் தெரிவிக்கிறோம்.