இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என் சகோதரன் செங்குட்டுவன்தான் சேர நாட்டு மகுடத்துக்கு உரியவன். ஒரு நாள் கொலு மண்டபத்தில் ஒரு ஆரூடக்காரன் நுழைந்தான். அவன் அண்ணனுக்கு முடி கிடைக்காது தம்பிக் குத்தான் அந்த அதிர்ஷ்டம் என்று புளுகினான். செங்குட்டுவன் முகத்திலே மாறுதல் படர்வதை நான் கண்டேன், "எனக்கு ஆட்சியா? இல்லை... இல்லை.... இந்த ஜோஸ்யத்தைப் பொய்யாக்குகிறேன்" என சபதம் ஒலித்து உடனே துறவறம் பூண்டேன். அண்ணனையே அரியணையில் அமர்த்தி அகமகிழ்ந் தேன். இது நான் சகோதரனுக்காகச் செய்த தியாகம். ஆனால் தமிழனைக் கேளுங்கள் சகோதர வாஞ் சையுள்ள ஒருவன் பெயரைச் சொல்ல முடியுமா?" என்று! உடனே பதில் வரும் 'இராமன் தம்பி பரதன்' என்று! என்பெயரும் நான் தந்த சிலப்பதி காரமும் தமிழனுக்குச் சரியாகத் தெரியாது. காரணம் என்ன? இளங்கோவடிகள்.