உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தார்கள். பார்வதிதேவி பரமசிவன் தோளிலேகிடந்த பாம்பை யெடுத்து (ஸ்கிப்பிங் ரோப் ) குதிக்கயிறு ஆடிக் கொண்டிருந்தாள். பிரம்மாவும் சரஸ்வதி யும் புதிதாக வெளியான ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யத்தில் இருந்தனர். மகாவிஷ்ணு, லட்சுமி யோடு கண்ணா மூச்சி யாடுவதாகப் பொய் சொல்லி அவள் கண்ணைக் கட்டி அலைய விட்டுவிட்டு...... ஊர்வசியும் அவரும் ஒரு அருவியின் பக்கம் போய் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர். மயிலுக்கும் சேவ லுக்கும் சண்டை மூட்டிவிட்டு, வள்ளி தெய்வயானை சமேதராய் முருகன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். விநாயகர் துதிக்கையால் நீரையுறிஞ்சி அதை தேவ மாதர்கள் மேலிறைத்து வேடிக்கை செய்திருந் தார். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை யென்றறிந்த பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் ஜாகை "க்குப் போய்க் கொண்டிருந்தார். 66 " சொர்க்க லோகத்தில் இந்தச் சோலை விருந்து! இவைகள் எதையுமே கவனிக்காமல் புல்தரை யில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட் டத்தினரின் தோள் பட்டையில் ஒகு மஞ்சள் நிறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/15&oldid=1701724" இலிருந்து மீள்விக்கப்பட்டது