உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பூணூலை உருவிக் கொண்டே ஆரியம் பேச..... புன் சிரிப்பு நெளிய திராவிட விபீஷணர்கள் கர கோஷம் செய்ய.....காங்கிரஸ் கட்சி வளர்ந்தது. வகுப்புக்கள் ஒழிந்தால் தான் வகுப்பு வாதம் ஒழியும்......அதுவரை நாம் வாழ-வளம்பெற வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தேவை. ஆரியம் ஒற்றுமை வலை விரிக்கும் ஒன்றே குல மென்று கூறும், உம்மை யெலாம் ஒதிய மரங்களாக்கி உயர்ந்த ஸ்தானங்களில் அமர்ந்து உல்லாசம் பேசும். அது ஒரு ஓநாய்க்கூட்டம். இந்தக் கருத்தை அந்த வீரர் எடுத்துரைத்தார். வேதியர் அவரை நாஸ்திகர் என்றனர். விபீஷணர்கள் அவரை வகுப்பு வாதி என்றனர். விழித்துக் கொண்ட மக்கள் அவரை மதித் தலைவர் என்றனர். விபீ ஷணர் விழிப்படைய-விழித்துக் கொண்டவர் விளக் கம் பெற உதவி புரியும் வகையில் நாம் தரவேண்டிய செய்தி ஒன்றுளது. "திருப்பதி ஓரியண்டல் கல்லூரியில் பொது உணவு முறை ஏற்படுத்துவதுபற்றி அரசாங்கம்" வற்புறுத்துகிறது. தேவஸ்தானக் கமிட்டியார், அரசாங்கத்தை இவ் வுத்திரவுபற்றி புனராலோ சனை செய்யுமாறும், பொது உணவு முறையில் கலந்துகொள்ளச் சம்மதிக்காத மாணவர்களுக்குத் தற்காலம் கொடுக்கப்பட்டு வரும் உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்க அனுமதிக்கு மாறும் வேண்டிக்கொள்கிறது. ஆனால் அரசாங் கத்தார் இது பற்றி புனராலோசனை செய்யத் தயாராக இல்லை, என்று அறிகிறேன். ஓரியண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/35&oldid=1701839" இலிருந்து மீள்விக்கப்பட்டது