உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஒரே முத்தம் துரியோதனனுக்கு அடிமையாகவேண்டும் என்பது தெரிந்தும் சும்மா இருந்தாள். சித்ரா :- கதை வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங் கள், விபீஷ:- பேசாதே! அடுத்த மாதம் நீ இன்பபுரியின் மகா ராணி, நான் மகாராஜா! 'இமயா பராக்" [என் று சேவகன் சொல்ல, சித்ரா போய்விடுகி றாள்] இமய:- விபீஷணரே! ஒரு புதுமையான பெண் வந்திருக் கிறாள். அடடா! அவள் என்னென்ன வித்தை செய்கிறாள். விபீஷ - அது யார் அவள்? இமய:- நல்ல அழகு, நல்ல முகம், நல்ல உடல்! விபீஷ- எங்கே அவள்? இமா:- அவள் பேச்சு விணையின் ஓசை! அவள் பார்வை குளிர்ந்த நீரோடை? விபீஷ :- இப்பொழுது எங்கே இருக்கிறாள்? . இமய:- அவள் நடக்கும்போது அசல் மயிலின் சாயல்தான். விபீஷ:- அடக்கர்மமே! அவள் எங்கே இருந்து தொலைக் கிறாள்? இமய மய:- இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். மிக முக்யமான விஷயம். விபீஷ:- என்ன அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/56&oldid=1702662" இலிருந்து மீள்விக்கப்பட்டது