உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பிரிவினை கீதம் 'தென்னிந்திய உணவுப் பஞ்சம் ராமபா தசாகர் திட்டத்தை நிறைவேற்றினால்தான் தீரும். இத் திட் டத்தை ஆராய்ந்து வேண்டியன செய்வதற்காக மத்திய அரசாங்கம் என்னை நியமித்தது. நானும் வெகு ஆவ லுடன் ஒப்புக்கொண்டேன். திட்டம் சம்மந்தமான வேலைகளை ஆரம்பித்தேன். ஆனால், மத்திய அரசாங் கமோ வட இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான பல திட் டங்களில் பணத்தை விரயம் செய்துவிட்டு, தென்னிந் தியாவிலுள்ள ராமபாதசாகர் திட்டத்திற்கு இப்போது பணமில்லை என்று கூறிவிட்டது. - " எஸ். வி. ராமமூர்த்தி, ஐ.சி.எஸ். "சுதந்திரா ", 8-6-'51 இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று கூறும் தோழர்களுக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக் கின்றோம். மத்திய அரசாங்கம் தென்னிந்தியாவைப் பல வகையிலும் துரோகம் செய்கிறது என்பதும், தென் னிந்தியாவைச் சுரண்டி, வட இந்தியாவின் வாழ்வைப்