உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவைகளெல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டன; ஒரு காலத்திலே இது ஆட்சிக் கட்டிலிலேகூட இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் அந்தக் கொள்கைகள் பதிந்திருந்தன. ஆனால் ஒரு ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தக் கலாச்சாரமே அழிந்துவிட்டது என்று எதிர்கால வரலாறு படைக்கப்பட்டு விடும். அதைத் தடுக்கத்தான் இன்றைக்கு நம்முடைய கழகம் பணிகளை ஆற்றிட வேண்டியிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றி வாய்ப்பை இழந்தோரும் நம் உடன்பிறப்புகள்தான்! அந்தப் பணிகளை நாம் எப்படி ஆற்றுவது? எவ்வாறு ஆற்றுவது? எந்த முறையில் ஆற்றுவது? நான் முதலில் உங்களையெல்லாம் மன்றாடிக் கேட்டுக்கொள்ள விரும்பு கிறேன். மெத்த பணிவன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். கழகத்தின் தேர்தல் முடிந்து மகிழ்ச்சிகரமாக இந்த பொதுக்குழுவில் கூடியிருக்கிற உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் பொதுக்குழுவுக்கு வரமுடியாமல் வெற்றி வாய்ப்பை இழந்து ஊரில் தங்கியிருக்கின்ற உடன்பிறப்புக்களை யெல்லாம் எண்ணிப் பாருங்கள். அவர்களையெல்லாம் பகைவர்களாக கருதாதீர்கள். "அவர்களும் நம்மவர்கள் தான். நம்முடைய அண்ணன் தம்பிகள்தான். யார் பணியாற்றுவது, பொறுப்பேற்பது என்று நடைபெற்ற போட்டியில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். நாம் முன்னுக்கு வந்திருக்கின்றோம். எனவே அவர்களும் நாமும் சேர்ந்து, இணைந்து கழகத்தை வலுப்படுத்து 15