உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சுக்கோப்பை சாரமா? நீ செய்தது விபசாரமா? எது விபசாரம்?மன நிலையை அறிந்துக்கொள்ள முடியாத மடமையே! அழிந்து படு! நான் தேடின கணவனை என்னிடமிருந்து பிரித்தாயே, அதுவே விபசாரமல்லவா? என் வாழ்வை வெட்டிப் பிரித்த வேற்றுமைப் பிசாசே! அழிந்து போ! ஒழிந்து படு!எது விபசாரம்? எது விபசாரம்? சீன். 17. டம்: ரோடு அய்யர் கருப்பன் சந்திப்பு) கரு : என்ன சாமி, இப்பதான் போரீங்களா? அய்: ஐயையோ! சத்தம் போடாதே. மானத்தை வாங்கிடுவே போலிருக்கே. ஆமாம, சாராயக் கடையிலே யாரு இருக்கா? கரு : ஒருத்தரும் இல்லை. சீக்கிரமா போங்க. ஏன் சாமி, நானும் வரட்டுமா? (அய்யர் போதல்) அய் : இன்னைக்கு வரும்படி ரொம்ப குறைச்சல். கரு : என்ன சாமி,எப்பப்பாத்தாலும் சீட்டெல்லாம் ஆடுறீங்க. இல்லென்னு சொல்ரீங்கோ. அய்: அதெல்லாம் சொல்றத்துக்கு இதுதானா இடம்? ஆமாம். இப்போ எங்கே போறே? கரு : உங்க விரோதி ஒருத்தன் இருக்கான் பாருங்கோ. அவனுக்குப் புத்தி கொடுக்கப் போரேன். அய்: ஒருத்தன் என்ன. உலகமேதான் எனக்கு விரோதி. அது யாரு என் விரோதி? 50