உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மாவட்ட இராமநாதபுரம் மாவட்டத்திலே தொடங்கி இன்றைக்குத் தமிழகம் முழுவதும்பரவலாக நடத்திக் கொண்டு வருகிறோம். திங்கள்தோறும் வாரமொரு நாள் குறிப்பிட்டு அதிகாரிகள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்கிறார்கள்' ஒரு நாளிலே கிட்டத்தட்ட 1,500 கிராமங்களுக்கு அதிகார் கள் சென்று மக்களைச் சந்தித்து அவர்களுடைய மனுக்களைப் பெற்று உடனடியாகக் கோரிக்கைகளைத் தீர்த்து வைக்கிறார் கள். இந்த மனுநீதித் திட்டம் இந்த ஆட்சியிலே உருவாக்கப்பட்டுச் செம்மையாக நடைபெற்று வருகிறது. கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் இருக்கின்ற சாதா ரணக் குடிமகனுக்கு உதவிடப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்ற நகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை ஆகும். திரு கந்தப்பன் அவர்கள் தலைமையில் இந்த அரசினுடைய ஒத்துழைப்போடு அந்தத் திட்டத்தைச் செவ்வனே நடத்தி வருகிறோம், தீவிரமாகப் பல்வேறு பணிகளை ஆற்றி லரு கிறோம். மொத்தம் உள்ள நகராட்சிகள் 93-ல் ஏற்கெனவே வெள்ளையன் காலத்திலிருந்து 1967-ஆம் ஆண்டு வரையில் 30, 99 35 நகராட்சிகள் தான் தண்ணீர் வசதியைப் பெற் றிருந்தன -ஆனால் இன்று மொத்த நகராட்சிகள் 99-60 குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது 80 என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆலந்தூர், பல்லாவரம், ஆம்பூர், வாணியம்பாடி, பண்ணுருட்டி ஆத்தூர், தருமபுரி, கிருஷணகிரி, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பத்து இடங்களில் இன்றைக்கு இந்தப் வேலை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆய்வு நடந்து வருபவை, அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம் ஆகிய இடங்களாகும். 'அவுட் லைன் புரப்போஸுலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள. இடங்கள் நெல்லிக் குப்பம், பொன்மலை, சிங்காநல்லூர் ஆசியவை ஆகும். ஆய்வு மதிப்பீட்டுத் தொகையை, நிதிவசதி இல்லாததால் நகராட்சி கொளச்சல். செலுத்த முன்வராத இடங்கள், சீர்காழி, பத்மனாபபுரம் ஆகியவை ஆகும். இவைகள் மட்டுமல்லாமல். மொத்தம் இருக்கின்ற பேரூராட்சிகள் 641. இவற்றில் இதுவரையில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டவை 55. குடிநீர்த் திட்ட வேலைகள் நடந்துகொண்டிருப்பவை 27. ஆய்வு அனுமதிக்கப் பட்டவை 145. மிச்சம் 414. இதற்காக ஒரு தீவிரமான திட்டத்தை யோசித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் தமிழகத்தில் 7 ஆண்டுக் காலத்திற்குள்ளாகப் பாதுகாக்கப் பட்ட குடிநீர் இல்லாத கிராமம், பட்டி தொட்டி எதுவுமே ல்லை என்கின்ற உன்னதமான நிலையை நிறை வேற்றியே தீருவோம். அந்தச் சபதத்தை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். வீராணம் திட்டம் 1974-ஆம் நாம்